செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களிற்கு DNA பரிசோதனை செய்ய வேண்டும்
#SriLanka
#Human
#Lanka4
#ImportantNews
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Abi
3 hours ago
யாழ்ப்பாணம், செம்மணி பகுதியில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் எலும்புக்கூடுகள் யாருடையவை என்பதைத் துல்லியமாகக் கண்டறிவதற்கு, அவற்றுக்கு மரபணு (DNA) பரிசோதனை நடத்தப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பகுதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் இந்த எச்சங்களுக்குத் தொடர்பிருக்கலாம் எனப் பலராலும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், முறையான மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த விஞ்ஞானபூர்வ பரிசோதனைகள் மூலமே உயிரிழந்தவர்களின் விபரங்களையும், உண்மைத் தன்மையையும் கண்டறிய முடியும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே