மத்தியக் கிழக்கில் தொடரும் பதற்றம் - அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்!

#SriLanka #America #Iran #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
மத்தியக் கிழக்கில் தொடரும் பதற்றம் -  அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் தாக்குதல்!

குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள எட்டு அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளை கூட்டு ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலின் மூலம் அழித்ததாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது.

 ஈரானிய இலக்குகள் மீதான அமெரிக்க இராணுவத்தின் இரண்டாவது அலைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

  இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை வாஷிங்டன் மீறியதாகக் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. 

 புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள ஏற்பாடுகள், ஹோர்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ஈரானுக்கு வழங்குகின்றன என்றும், ஒப்பந்தத்தை மீறும் கப்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஐ.ஆர்.ஜி.சி மேலும் கூறியது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4