நீரிழிவு நோய் உள்ளவர்கள் கிரீன் டீயை அருந்தலாமா?

Nila
3 years ago
நீரிழிவு நோய் உள்ளவர்கள் கிரீன் டீயை அருந்தலாமா?

தற்போது அனைவரும் கிரீன் டீயை அருந்துவதை நாகரீகம் என நினைத்து அருந்துவது வழக்கமாகி விட்டது.

ஆனால் கிரீன் டீயை குடிப்பதால் என்ன நன்மைகள், எதற்காக அதைக் குடிப்பது ஒருநாளைக்கு எத்தனை தடவைகள் குடிக்கலாம், யாரெல்லாம் குடிக்கலாம், யார் குடிக்கக்கூடாது என பலவகையாக பார்க்கலாம்.

  • கிரீன் டீயை வெறும் வயிற்றில் அருந்துவது தவறு.
  • காரணம் கிரீன் டீக்கு குடலை அரிக்கும் தன்மை உண்டு.
  • அதனால்தான் கொழுப்பை வெட்டி உடலை மெலிய வைக்கிறது.
  • அதனால்தான் உணவு உண்ட பின்னர் இதனை அருந் தவேண்டும்.
  • இல்லையேல் சிலருக்கு குடல் புற்றுனோய், அல்சர் போன்ற நோய்களை உருவாக்கிவிடும்.
  • உடலில் உள்ள செல்கள் பாதிப்படையாமல் தடுக்கவும் கிரீன் டீ உதவுகிறது.
  • கொழுப்புகளை கரைத்து பருமன் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மையும் கிரீன்  டீக்கு உண்டு. 
  • கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. 
  • இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது.
  • மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ  அருந்தலாம்.
  • கிரீன் டீக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் தன்மை உண்டு.
  • நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களும், நீரிழிவு வருவதற்கு முந்திய நிலையில் உள்ளவர்களுக்கும் கிரீன் டீ அருந்தி பயன் பெறலாம்.
  • கிரீன் டீயில் சிறிய துண்டு எலுமிச்சைச்சாறு பிழிந்து குடிக்கலாம், நச்சுக்களை வெளியேற்றும் தன்மையை அதிகப்படுத்தும்.
  • அதிக பட்சம் 2 அல்லது 3 கப்  மட்டுமே குடிக்க வேண்டும்.
  • மூலிகைகள் மற்றும் இஞ்சி, ஏலக்காய், கருப்பு மிளகு மற்றும் இலவங்கப் பட்டை போன்ற மசாலாக்கள் சேர்க்கப்பட்ட கீரீன் டீக்களை தேர்ந்தெடுத்தால் அதிக உடல் நல பயன்கள் கிடைக்கும்.
  • கிரீன் டீ ‘ஆன்டிஆக்சிடென்ட்’ ஆகச் செயல்படுகிறது.
  • உடலில் உள்ள பிரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதிக்காமல் தடுக்கிறது.
  • பிரீ ரேடிகல்ஸ் ஆக்சிடைஸ் அடைந்து செல்களை பாதித்தால் உடலில் உள்ள கொழுப்புகள் கரையாமல் இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் முறையாக நடந்து உடலில் உள்ள  நச்சுப்பொருட்களை வெளியேற்றும்.