ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் தெரியுமா? ஆம் இந்த ரகசியம் பல ஆண்களுக்கு தெரியாது.

Nila
2 years ago
ஒரு பெண் எப்போது அழகாக இருக்கிறாள் தெரியுமா? ஆம் இந்த ரகசியம் பல ஆண்களுக்கு தெரியாது.
  • தாய்மை உறுதியாகி விட்டதை தன் கணவனுக்கு முதன் முதலில் வெட்கத்துடன் சொல்லும் தருணத்தில் பெண் அழகாகிறாள்.
  • முதன் முதலாய் சேலை உடுத்தி தெருவில் நடக்கும் போது அந்த வெட்கத்தில் உதட்டை     சுழிக்கும் போதெல்லாம் பெண் அழகாகிறாள்..
  • அதிகாலையில் வாசலில் கோலம் போடுகையில் முந்தானையை இழுத்து      பாவாடைக்குள் சொருகி தன் வலது கையை நெற்றியில் துடைக்கும் நேரத்தில் பெண் அழகாகிறாள்..
  • அவிழ்ந்த கூந்தலை  அள்ளி முடித்து கொண்டை போட்டு அடுத்த வேலைக்கு ஆயத்தமாவாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்.
  • தன் மகளுக்கு சிக்கெடுத்து தலை சீவி அந்த ஜடையை போட சீப்பை தன் தலையில் வைத்து இரு உதடுகளை முறுக்குவாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்.
  • சமைக்கும் போது கரண்டியால் ஒரு சொட்டு குழம்பை உள்ளங்கையால் நக்கி பார்த்து ஒரு கண்ணை மூடி ஒரு கண்ணை அகல திறப்பாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்..
  • தலைக்குளித்த ஈரக்கூந்தலில் வழியும் நீர் பின் பக்க ரவிக்கையில் நனைந்து அந்த ஈரச்சுவடு தெரிய கோவிலுக்கு வருவாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்
  • அரக்க பறக்க எழுந்து குளித்து ஒரேயொரு ஸ்டிக்கர் பொட்டுடன் கழுத்தில் கவரிங் செயினுடன் பேருந்தை எதிர்பார்த்து தவிப்புடன் நிற்கும் சமயத்தில் எல்லாம் பெண் அழகாகிறாள்..
  • பிரசவ அறையில் பிஞ்சு குழந்தையை பெற்ற பரவசப்பில் உதடு கடித்து கூந்தல் கலைத்து முகம் வெளிறி தன் கணவனை எதிர்பார்ப்பாளே அப்பொதெல்லாம் பெண் அழகாகிறாள்.
  • ஏதோ ஒரு மன உளைச்சலில் இருகரம் பற்றி நெஞ்சில் புதைந்து மனம் வலித்து அழுபவனை தாங்கி மனதை தேற்றி ஆறுதல் சொல்பாளே அப்போதெல்லாம் பெண் அழகாகிறாள்
  • இடுப்பில் குழந்தையை ஏற்றி கையில் பருப்பு சாதத்தை பிசைஞ்சு நிலாவை காட்டியோ தெருவில் பூச்சாண்டி கிட்ட புடிச்சு கொடுத்துருவேன் சொல்லியோ உணவு ஊட்டும் போதெல்லாம் பெண் அழகாகிறாள்.
  • பேசும் போது காதில் இருக்கும் கம்மல் ஆடுவதை பார்த்தால் இவள் பேசுவதற்காக அது தாளம் போடுகிறதோ என்று நாம் நினைக்கும் போது எல்லாம் பெண் அழகாகிறாள்
  • துரோகங்களையும்_வேதனைகளையும் அளவுக்கு அதிகமாக தாங்கிய சமயத்தில் இன்னும் நடப்பதற்கு ஒன்றும் இல்லையடா சாமி ஏமாறுவதற்கு நெஞ்சில் இடம் இல்லைடா சாமி என்று கண்ணில் நீர் தளும்ப மனதால் தன்னம்பிக்கை கூடி திமிர் கூடும் போதெல்லாம் பெண் அழகாகிறாள்.