இப்படியே போனால் டிசம்பரில் நாட்டை மூட வேண்டிய நிலை ஏற்படும்!
மக்கள் தங்களின் சுகாதாரப் பழக்க வழக்கங்களை மறந்து விடுவதால், தினமும் மருத்துவமனைகளுக்கு வரும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இப்படியே போனால் டிசம்பரில் நாடு மீண்டும் மூடப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றத்தின் செயலாளர் டொக்டர் கமல் ஏ பெரேரா நேற்று தெரிவித்தார்.
இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்கனவே கோவிட் கொத்துகள் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த சில நாட்களில் தினமும் 700க்கும் மேற்பட்ட கோவிட் நோயாளிகள் கண்டறியப்படுகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனைகளுக்கு வரும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மீண்டும் கோவிட் அலை வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
பலர் கோவிட் பற்றி மறந்துவிட்டனர். பிறந்தநாள் விழாக்களுக்கும் திருமண விழாக்களுக்கும் பெருந்திரளான மக்கள் வருவதை நாம் அறிவோம்.
முகமூடிகளை அணியுங்கள்இ கைகளை கழுவுங்கள்இ இடைவெளியைப் பேங்கள் இல்லையெனில்இ டிசம்பரில் மீண்டும் கோவிட் அலை வீசும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் தங்கள் சுகாதார பழக்கத்தை மறந்துவிட்டால்இ படிப்படியாக திறக்கப்படும் பள்ளிகளை மீண்டும் மூட வேண்டியிருக்கும்.