யாழ் கடற்பரப்பில் மிதந்து வந்த 7 மூடைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
Reha
2 years ago
இன்று காலை யாழ்ப்பாணம்-மாதகல் கடற்பரப்பில் மிதந்து வந்த 7 மூடைகளில் 275 கிலோ கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கருதப்படும் 7 மூடை கஞ்சா கடலில் மிதந்து வந்த சமயம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கடற்படையினர் கைப்பற்றப்பட்ட கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு எடுத்து வந்துள்ளனர்.