மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Prabha Praneetha
2 years ago
மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

தீவிரவாத தாக்குதல் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து மும்பையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவுடன் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து மும்பையில் உள்ள ரயில் நிலையங்கள், வழிப்பாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களில் பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

அதேநேரம் மும்பையில் ஒமிக்ரோன் தொற்று பரவலை முன்னிட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.