இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

Prabha Praneetha
2 years ago
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா : 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

இந்தியாவில் நேற்று  ஒரேநாளில் 90 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அதேநேரம் 325 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 82 இலட்சத்து 876 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் நேற்று மாத்திரம் 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், மருத்துவ மனையில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 2 இலட்சத்து 85 ஆயிரத்து 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்