சந்திரயான்-3 ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்தப்படும் - மத்திய மந்திரி தகவல்

Prasu
2 years ago
சந்திரயான்-3 ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்தப்படும் - மத்திய மந்திரி தகவல்

பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளி துறையின் மத்திய இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங்கிடம், நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2ல் இருந்து கற்றுக்கொண்டது மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களின் ஆலோசனைகள் அடிப்படையில் சந்திரயான்-3ஐ வெற்றிகரமாக்கும் செயல்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பான சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு வருகிற ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து வருகிற டிசம்பர் மாதம் வரை, 8 ராக்கெட் செலுத்தும் திட்டங்கள், 7 விண்கலத் திட்டங்கள், 4 தொழில்நுட்ப செய்முறை திட்டங்கள் உள்பட 19 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டன. விண்வெளித்துறை சீர்திருத்தங்கள், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தேவையால் பல்வேறு திட்டங்களுக்கு மறுமுன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.