ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கியுள்ள இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?

Reha
2 years ago
ரஷியாவிடமிருந்து எஸ்-400 ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கியுள்ள இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?

400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை ஆகியவற்றை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்தியா கொள்முதல் செய்துள்ளது.

சுமார் ரூ. 40 ஆயிரம் கோடிக்கு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இந்த ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பின் முதல் தொகுப்பை இந்தியாவிடம் ரஷியா ஒப்படைத்துள்ளது. இந்த முதல் தொகுப்பை பஞ்சாப் செக்டார் பகுதியில் பாதுகாப்பு படை நிலை நிறுத்தியுள்ளது.

இதற்கிடையில் ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ஏவுகணை தடுப்பு அமைப்பை இந்தியா வாங்க அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்நிலையில், இந்தியா - அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையேயான குவாட் கூட்டமைப்பின் மாநாடு கடந்த நில நாட்களுக்கு முன் மெல்பொர்னில் நடைபெற்றது.

அந்த மாநாடு தொடர்பாக வெள்ளைமாளிகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரின்ஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவரிடம், எஸ் 400 ஏவுகணை கொள்முதலில் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதிலளித்த பிரின்ஸ், குவாட் மாநாட்டின் போது அமெரிக்கா - இந்தியா இடையே பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக இருதரப்பு ஆலோசனை நடைபெற்றது. இதை தவிர்த்து வேறு எந்த விவாதத்தையும் இங்கு தெளிவுபடுத்த நான் விரும்பவில்லை’ என்றார்.