யாழ்ப்பாணத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Nila
2 years ago
![யாழ்ப்பாணத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு](https://ms.lanka4.com/images/thumb/jaffna-1-1-1-1-1-1-1-1-1-1-1-1-1.jpg)
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குடவத்தை – துண்ணாலை, கிழக்கு கரவெட்டியை சேர்ந்த மயூரன் மகிந்தன் என்ற 8 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
குறித்த சிறுவன் நேற்றைய தினம் மாலை தனது நண்பர்களுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளான்.
சிறுவனை உடனடியாக , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உடல் கூற்று பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/you.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/fb.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/ins.png)
![உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!](https://assets.lanka4.com/banner/tiktok.png)