ரணிலால் ஏற்பட்ட மாற்றம்; மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

#SriLanka #Ranil wickremesinghe #people
ரணிலால் ஏற்பட்ட மாற்றம்; மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

புதிய பிரதமராக கடமைகளை பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே ஆரம்பித்துள்ளார்.

அதற்கமைய, சீனா, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளின் இராஜதந்திரப் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடியுள்ளார். இதன்போது கடனாக இன்றி இலங்கைக்கு வழங்கக்கூடிய உதவிகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறை தொடர்பிலும் புதிய பிரதமர் ரணில் கலந்துரையாடியுள்ளார். அதற்கமைய விரைவில் சில பொருட்களின் விலைகளில் மாற்றம் ஒன்று ஏற்படும் என தெரியவருகின்றது.