என்மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை – நாமல்
Nila
2 years ago

எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களையோ அதிகாரிகளையோ நியமிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட வெளியிட்ட தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னால் அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களை நியமிக்க முடியும் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அவர் தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களுக்கான அதிகாரிகளை நியமிக்கும் செயற்படு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.



