பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பு விளக்குகளை எப்போது வெட்டுவது என்று சொல்வதல்ல: எரிசக்தி அமைச்சர்

Prathees
2 years ago
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பு விளக்குகளை எப்போது வெட்டுவது என்று சொல்வதல்ல: எரிசக்தி அமைச்சர்

நாளாந்த மின்வெட்டு நேரங்களை அறிவிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இல்லை எனவும், நாட்டிற்கு தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு தேவையான மின்சார திட்டங்களை நடைமுறைப்படுத்தவே உள்ளதாகவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அந்த ஆணைக்குழுவின் தலைவரால் 250 ரூபாவில் ஒரு லீற்றர் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடிந்தால் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரைப் பொறுப்பேற்கச் சொல்வதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசியல்வாதிகள் 04 முதல் 05 வருடங்கள் வரை நியமிக்கப்படுகின்ற போதிலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அதிகாரிகள் நீண்டகாலமாக நியமிக்கப்படுகின்றனர்.

20 வருடங்களாக இயங்கி வரும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு ஆணைக்குழுவிடம் கோரவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இவ்வாறான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக ஆணைக்குழுவாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆணைக்குழு அறிவிக்க வேண்டும் என நேற்று (03ஆம் திகதி) அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!