சபாநாயகருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்
Prathees
2 years ago

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இக்கலந்துரையால் இடம்பெறவுள்ளது.
போராட்டக்காரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் தலைவர்கள் என அடையாளம் காணப்பட்ட இருபத்தைந்து பேர் இதில் பங்கேற்கவுள்ளனர்.
சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுவதற்கான ஆலோசனைகளை இதன்போது பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



