கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவு

Kanimoli
2 years ago
கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவு

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக நாட்டில் கொரோனா காரணமாக எந்தவொரு மரணங்களும் பதிவாகயிருக்காத நிலையில் நேற்று இடம்பெற்ற மரணம் மக்கள் மத்தியில் மீண்டும் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா அச்சம் முழுமையாக நீங்கவில்லை என்பதும் இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவதானமாக இருக்க வேண்டும் என அரசாங்கத்தை மருத்துவர் சங்கம் வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.