போராட்டக்காரர்களின் கைவசம் ரூபவாகினி கூட்டுத்தாபனம்: தொலைக்காட்சியில் நேரலையில் போராட்டக்காரர்கள்

Mayoorikka
2 years ago
போராட்டக்காரர்களின் கைவசம் ரூபவாகினி கூட்டுத்தாபனம்:  தொலைக்காட்சியில் நேரலையில் போராட்டக்காரர்கள்

இலங்கையின் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினி கூட்டுத்தாபனத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிறுவனத்தை கைப்பற்றியதோடு, தொலைக்காட்சியில் நேரலையில் போராட்டக்காரர்கள் மக்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது தொலைக்காட்சி சேவை முற்றாகத் தடைப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.