சகல அரச கட்டடங்களையும் மீள கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானம்!

Nila
2 years ago
சகல அரச கட்டடங்களையும் மீள கையளிக்க போராட்டக்காரர்கள் தீர்மானம்!

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை உள்ளிட்ட  தம்வசமுள்ள அரச கட்டடங்களை மீள கையளிக்க காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர்.

நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட மாபெரும் போராட்டத்திற்கு போராட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட கட்டடங்களை கைப்பற்றப்பட்டன.

அத்துடன், நேற்று மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு போராட்டத்தையடுத்து, பிரதமரின் அலுவலகமும் போராட்டக்காரர்களின் வசமானது.