9 ஆம் திகதி அமைதியின்மை: இதுவரை 3,215 பேர் கைது

Mayoorikka
2 years ago
9 ஆம் திகதி அமைதியின்மை: இதுவரை 3,215 பேர் கைது

கடந்த 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற அமைதியின்மையுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்தும் கைதாவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் காரியாலயம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை மூவாயிரத்து 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.