புதிய ஜனாதிபதியானார் ரணில்: காலிமுகத்திடலில் போராட்டம்

Kanimoli
2 years ago
புதிய ஜனாதிபதியானார் ரணில்:  காலிமுகத்திடலில் போராட்டம்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பு நாடாளுமன்றில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று காலை முதல் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

ரணில் ஜனாதிபதியாக தெரிவானமைக்கு தமது எதிர்ப்பினை தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில் அப்பகுதியில் களநிலவரம் சூடுபிடித்து வருகிறது.