மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் நோக்கி பயணம்

Kanimoli
2 years ago
மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் நோக்கி பயணம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள பயணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று(29) முற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பிலிப்பைன்ஸ் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சர்வதேச தலைமைத்துவ மேம்பாட்டு மாநாடு இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மனிலாவில் நடைபெறவுள்ளது.

அதன் ஆரம்ப நிகழ்வுகள் நாளை இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் சர்வதேச தலைமைத்துவ மாநாட்டின் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாநாட்டின் தலைமை உரையை நிகழ்த்தும் வாய்ப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.