வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள தகவல்

Prabha Praneetha
2 years ago
வாகன இறக்குமதி குறித்து வெளியாகியுள்ள தகவல்

புலம்பெயர் தொழிலாளர்கள் புதிய மின்சார வாகன திட்டத்துடன் சூரிய சக்தி அமைப்பை (Solar power system) கொள்வனவு அல்லது இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கட்டாய நடைமுறை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடயத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனத்துடன் அதனை சார்ஜ் செய்வதற்காக சூரிய சக்தி அமைப்பினையும் கொள்வனவு செய்வது கட்டாயம் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது முதல் 6 மாதங்களுக்கு இந்த கட்டாய நடைமுறையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஜூலை 1ஆம் திகதி முதல் உரிய தொகையை வைப்பிலிட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இறக்குமதி உரிமத்தை பெற தகுதியுடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.