ஈஸ்டர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார் ரிஷாட் பதியுதீன்

Prathees
3 years ago
ஈஸ்டர் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார் ரிஷாட் பதியுதீன்

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று முஸ்லிம் தீவிரவாதிகள் நடத்திய தொடர் ஈஸ்டர் தாக்குதலுக்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றம் சுமத்திய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு விசாரணைகளில் இருந்து விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று (02 ஆம் திகதி) உத்தரவிட்டார். 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தொடர போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சந்தேகநபர் ரிஷாத் பதுர்தீன் நேற்று (02) நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். மேற்படி குற்றச்சாட்டின் கீழ் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீன், 111 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அந்த வருடம் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் தடவையாக கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4