இலங்கையின் முதலாவது குரங்குக் காய்ச்சல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

Prathees
1 year ago
இலங்கையின் முதலாவது குரங்குக் காய்ச்சல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

இலங்கையில் முதலாவது குரங்குக் காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர் கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து வந்த இலங்கை இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.

சிகிச்சை பெற வந்தபோது, ​​குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

விரிவாக்கப்பட்ட நிணநீர் கணுக்கள் மற்றும் சோர்வு உள்ளிட்ட பிற அறிகுறிகளின் காரணமாக அந்த நபர் சிகிச்சைக்காக தேசிய STD கிளினிக்கிற்கு வந்தார்.

மருத்துவர்களின் சந்தேகத்தின் அடிப்படையில்இ இந்த நபர் மருத்துவ ஆராய்ச்சி துறையின் வைராலஜி பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட சோதனைகளின்படி, குரங்கு காய்ச்சலுக்கான குறிப்பிட்ட மரபணுக்களை அடையாளம் காண முடிந்தது.

அதன்படி, இந்த நபர் தற்போது  IDH  காய்ச்சல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.