தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சிட்னி நீதிமன்றம் நடவடிக்கை

Kanimoli
3 years ago
 தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சிட்னி நீதிமன்றம் நடவடிக்கை

  தனுஷ்க குணதிலகவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சிட்னி நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

பெண்னொருவர் மீதான வன்புனவு தொக்டர்பில் அவுஸ்திரேலியாவில் கைதான தனுஷ்க மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்மானத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

அந்தத் தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக தனுஷ்க குணதிலக்க இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4