உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள்  உயிரிழப்பு

#India #Death #children
Prathees
3 years ago
உஸ்பெகிஸ்தானில் இந்திய இருமல் மருந்தால் 18 குழந்தைகள்  உயிரிழப்பு

உஸ்பெகிஸ்தானில் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் சிரப்பை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான கடிதத்தில் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதற்கட்ட சோதனையில் அதில் எதனல் லைகோல் என்ற நச்சுப் பொருள் இருப்பது பரிசோதனைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்களம் தெரிவித்துள்ளது.

மெரியன் பயோடெக் என்ற நிறுவனம் குழந்தைகளுக்கான இருமல் மருந்தை தயாரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், மருத்துவரின் பரிந்துரைகளை மீறி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தேனை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சம்பவத்திற்குப் பிறகுஇ இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் அமைந்துள்ள தொடர்புடைய மருந்து நிறுவனம், இந்திய சுகாதார அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 வகையான மருந்துகளை குடித்து 69 குழந்தைகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4