சிறுமியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஞான கேவேஷன விஹாராதிபதி கைது

#Sexual Abuse #children #Police
Prathees
1 year ago
சிறுமியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஞான கேவேஷன விஹாராதிபதி கைது

பதினைந்து வயது சிறுமியை கடுமையாக துஷ்பிரயோகம் செய்த விஹாரதிபதி மற்றும் அவரது சகோதரன் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த சிறுமியின் அத்தை மற்றும் பாட்டி ஆகியோரை தொம்பகஹவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பை அண்மித்த பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து பாடசாலைக்கு செல்லும் இந்த சிறுமி கடந்த நவம்பர் மாதம் பாடசாலை விடுமுறையின் போது தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் பாட்டி, அத்தையும், லியாங்கொல்ல ஞான கெவேஷனா விஹாரைக்கு அழைத்துச் சென்றபோது, ​​விஹாரைக்குள்ளேயே, கோவிலின் தலைவர் கடுமையாக மானபங்கம் செய்துள்ளார்.

பின்னர், விஹாராதிபதி தேரரின் சகோதரரும் சிறுமியின் பாட்டியின் வீட்டில் வைத்து பாரிய பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

விஹாராதிபதியின்  சகோதரரால் சிறுமி துஸ்பிரயோகம் பண்ண பாட்டி இடமளித்ததாக  கிராமத்தில் தகவல் பரவியதையடுத்து, சிறுமியின் பெற்றோர், உறவினர் மூலம்  சிறுமியை மருத்துவரிடம் காட்டியதை அடுத்து சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 

பின்னர் சிறுமியின் தாயார் தொம்பகஹவெல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், கற்பழிப்புக்கு ஆதரவளித்த விஹாராதிபதி, விஹாராதிபதியின், சிறுமியின் பாட்டி மற்றும் அத்தை ஆகியோரை கைது செய்து சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சியாம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொம்பகஹவெல பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.ஓ.பி. சில்வா சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!