ஹோமாகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு

#SriLanka #Police #GunShoot
Prathees
3 years ago
ஹோமாகம பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு

ஹோமாகம நியந்தகல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

 குறித்த நபர் தனது வீட்டில் இருந்த போது இனந்தெரியாத நபர்களால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்தவர் 46 வயதான ஹோமாகம, நியந்தகல பிரதேசத்தைச் சேர்ந்தவர்.

 தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்ய ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4