ஈராக் திருமண விழா தீ விபத்து - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
![ஈராக் திருமண விழா தீ விபத்து - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு](https://ms.lanka4.com/images/thumb/2023/09/1696193690.jpg)
உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வட ஈராக்கின் நினிவே நகரில் நடந்த கிறிஸ்தவ திருமண விழாவில் தீயில் சிக்கி உயிரிழந்த மக்களுக்காக 03 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை நடந்த இந்த சோகத்திற்குப் பிறகு, சிறு தீக்காயங்களுக்கு ஆளான மணமகனும், மணமகளும் முதன்முறையாக ஊடகங்கள் முன் வந்து தீயில் சிக்கி இறந்த தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மணமகளின் உறவினர்கள் மற்றும் மணமகனின் தாய் உட்பட 113 பேர் தீயில் இறந்தனர் மற்றும் சுமார் 150 பேர் தீக்காயம் அடைந்தனர்.
திருவிழாவை அழகுபடுத்தும் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீப்பொறியால் இந்த தீ விபத்து ஏற்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக மண்டபத்தின் உரிமையாளர், ஊழியர்கள், பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்தவர்கள் என 14 பேர் கைது செய்யப்பட்டனர்.