இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த பிரித்தானியர்

#India #Attack #Britain #Threat
Prasu
1 year ago
இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த பிரித்தானியர்

இந்தியாவை தனக்கு பிடிக்கவில்லை என்றும், அந்நாட்டை அணு ஆயுதத்தால் தாக்குவேன் என்றும் பிரித்தானிய பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார் .

பிரித்தானியாவைச் சேர்ந்த மைல்ஸ் ரூட்லெட்ஜ் (Miles Routledge) என்பவர் சமூக வலைதளத்தில் இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

மைல்ஸ் இந்த பதிவை புதன்கிழமை (ஆகஸ்ட் 21) எக்ஸ்-ல் பதிவிட்டார்.ஆனால் பின்னர், மைல்ஸ் அந்த பதிவை நீக்கினார்.

இதுபோன்ற ஒரு பதிவு இணையத்தில் மக்கள் மத்தியில் பரவியதை அடுத்து, மைல்ஸின் பதிவுக்கு எதிராக பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மைல்ஸ், "எனக்கு இந்தியாவை பிடிக்கவில்லை. 

இது தவிர, இனவெறி கருத்துகளையும் அவர் தெரிவித்தார். மற்றொரு பதிவில், "நான் பிரித்தானியாவின் பிரதமரானால், பிரிட்டிஷ் விவகாரங்களில் தலையிடும் எந்த நாட்டையும் எச்சரிக்க அணுசக்தி தாக்குதலை நடத்துவேன். 

நான் பாரிய சம்பவங்களைப் பற்றி பேசவில்லை, சிறிய தவறுகளுக்கு கூட, முழு நாட்டையும் அழிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4