விசாரணைகளால் சலேவின் குடும்பத்திற்கு நேர்ந்துள்ள அவலம்: தாய், மனைவி கடுமையான மன உளைச்சலில்!
சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறிய குழுவொன்று, அவரது தாய், மனைவி மற்றும் மகனை பயன்படுத்தி முன்னெடுத்த பிரச்சார நடவடிக்கைகள் இறுதியில் அந்தக் குடும்பத்தினரை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுரேஷ் சலே மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார், நாய்க்கு உணவு வழங்குவது போல நடத்தப்பட்டுள்ளார், தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்
போன்ற பல்வேறு தகவல்கள் சமூகத்தில் பரப்பப்பட்டதாகவும், இதன் மூலம் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கடுமையான உளவியல் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சமூகத்தில் அவர்களை எதிர்மறையாக பார்க்கும் சூழலை உருவாக்கி, வெளிப்புற அழுத்தங்களுக்கும் ஆளாக்கியதாகவும் குறிப்பிடப்படுகிறது.
அதேவேளை, நாமல் ராஜபக்ஷ, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர மற்றும் சரத் வீரசேகர உள்ளிட்டோர் தொடர்ச்சியான சத்தியாகிரகப் போராட்டம் நடத்துவதாகக் கூறி முன்னெடுத்த பிரச்சாரங்களின் விளைவாக, சுரேஷ் சலே ஒரு புலனாய்வு அமைப்பின் தலைவராக இதுவரை உருவாக்கியிருந்த பொதுப் பிம்பம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மேலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, வசந்த முதலிகே மற்றும் நேரடியாக அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானதாகக் கூறப்பட்ட சரத் பொன்சேகா, ஷானி அபேசேகர ஆகியோருடன் ஒப்பிடுகையில், சுரேஷ் சலே மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே