130 நாட்களுக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும் மறைந்த ஈரானிய உச்ச தலைவரின் உடல்
பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க வான்வழித் தாக்குதல்களால் கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் நாட்டை ஆண்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார்.
இந்நிலையில், கமேனியின் உடல் ஜூலை 9 அன்று நல்லடக்கம் செய்யப்படும் என்று அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.
ஆரம்பத்தில், மார்ச் மாதத்தில் நல்லடக்கம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் பின்னர் போர் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
அவரது சொந்த ஊரான வடகிழக்கு புனித நகரமான மஷ்ஹத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
1979ல் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டதிலிருந்து மூன்றாவது தலைவராக, அலி கமெனியின் மகன் மொஜ்தபா, மார்ச் மாதத் தொடக்கத்தில் அவருக்குப் பின் உச்சத் தலைவராகப் பதவியேற்றார்.
தன் தந்தை மற்றும் பல அதிகாரிகளைக் கொன்ற தாக்குதல்களில் காயமடைந்த மொஜ்தபா கமெனி, பதவியேற்றதிலிருந்து பொதுவெளியில் தோன்றவில்லை; மேலும், அவர் கூறியதாகக் கூறப்படும் அறிக்கைகள் மூலம் மட்டுமே தகவல்களைத் தெரிவிக்கிறார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே