அமலா போல் எடுத்துள்ள திடீர் முடிவு

Nila
3 years ago
அமலா போல் எடுத்துள்ள திடீர் முடிவு

தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டையும் எனக்கு பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை என அமலா பால் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் அமலா பால்.

சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும்.

இவர், ஆடை படத்திற்கு பிறகு முற்றிலும் ஆளே மாறிவிட்டார்.

ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம் போடுவது, ஆண் நண்பரின் மொட்டை தலையில் முத்தம் கொடுப்பது, படுக்கையறை போட்டோஸ், நண்பர்களுடன் சரக்கடிப்பது என சர்ச்சை போட்டோக்களை பதிவிட்டு தற்போது சர்ச்சை நாயகியாகவே மாறிவிட்டார்.

வெப் தொடரில் தற்போது இவர், குடி யடமைத்தே என்ற தெலுங்கு வெப் தொடரில் நடித்துள்ளார்.

இத்தொடரில் அமலாபால் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இத்தொடர் ஜீலை 16ந் தேதி வெளியாக உள்ளது.

பிரித்து பார்க்கத் தெரியவில்லை எனக்கு 17 வயது இருக்கும் போது நான் திரைத்துறைக்குள் வந்தேன்.

என் தனிப்பட்ட வாழ்வில் நான் கடந்து வந்த விஷயங்கள் அனைத்தும் என் திரை வாழ்விலும் பிரதிபலித்து வந்தன. அதேபோல சினிமாவில் நான் சந்தித்த விஷயங்கள் என் சொந்த வாழ்க்கையிலும் பிரதிபலித்தன.

சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டையும் எனக்கு பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை.

சுயபரிசோதனை காலம் 2020ம் ஆண்டு எனக்கு அறிவூட்டும் ஆண்டாக இருந்தது.

என் தந்தையின் மரணத்தை நான் எதிர்கொண்டேன். அவை எனக்கு உண்மையில் ஒரு சுயபரிசோதனை காலமாகவே இருந்தது.

அப்போதுதான் நான் ஒரு திறந்த புத்தகமாக இருந்தேன். எனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லை என்று உணர்ந்தேன்.

நான் செய்த விஷயங்களைத் தாண்டி என் வாழ்க்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதை உணர்ந்தேன்.

தற்போது, நான் சினிமா வாழ்க்கையிலிருந்து என் தனிப்பட்ட வாழ்க்கையை பிரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.