பேரறிவாளனுக்கு 5ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு!!

Keerthi
2 years ago
பேரறிவாளனுக்கு 5ஆவது முறையாக பரோல் நீட்டிப்பு!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு 5ஆவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இவருக்கு சிறுநீரக தொற்று பிரச்சனைக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மாதம் பரோல் வழக்கும்படி, அவரது தாய் அற்புதம்மாள் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பினார்.

அதன்படி, கடந்த மே மாதம் 28ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. இதனால் அவர் போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து அடிக்கடி விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல் நிலை, சிகிச்சை பெற வசதியாக இரண்டாவது முறையாக ஜூன் 29ஆம் தேதியும், மூன்றாவது முறையாக ஜூலை 28ஆம் தேதி, நான்காவது முறையாக ஆகஸ்ட் 25ஆம் தேதியும் தமிழக அரசு பரோல் வழங்கியது.

இந்நிலையில் இன்று அவருக்கு பரோல் முடிந்து புழல் சிறையில் அடைக்க போலீசார் தயாராக இருந்தனர். அப்போது ஐந்தாவது முறையாக பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது தாய் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார்.