க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 60

#history #Article #Tamil People
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம் - ஸ்ரீமத் பகவத்கீதை. தமிழர் வரலாறும் தொன்மையும். பாகம் - 60

பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை

॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥

அத த்ரயோதஷோ அத்யாய:।

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்

(மனிதனும் மறுபிறவியும்)

அர்ஜுன உவாச।
இதம் ஷரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே।
ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:॥ 13.1 ॥

ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! இந்த உடம்பு வீடு, இதை யார் அறிகிறானோ அவர் அதில் குடியிருப்பவன். உண்மையை உணர்ந்தவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

ஸ்ரீபகவாநுவாச।
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத।
க்ஷேத்ரக்ஷேத்ரயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம॥ 13.2 ॥

அர்ஜுனா ! எல்லா வீடுகளிலும் குடியிருப்பவன் நான் என்று அறிந்துகொள். வீடு மற்றும் குடியிருப்பவனை பற்றிய அறிவே உண்மை அறிவு என்பது எனது கருத்து .

தத்க்ஷேத்ரம் யச்ச யாத்ருக்ச யத்விகாரி யதஷ்ச யத்।
ஸ ச யோ யத்ப்ரபாவஷ்ச தத்ஸமாஸேந மே ஷ்ருணு॥ 13.3 ॥

அந்த வீடு எது, எப்படிபட்டது, என்ன மாற்றங்களுக்கு உள்ளாவது எதிலிருந்து எது உண்டாகிறது, குடியிருப்பவன் யார், அவனது மகிமை என்ன ஆகியவற்றை சுருக்கமாக கூறுகிறேன் கேள்.

க்ருஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ருதக்।
ப்ரஹ்மஸூத்ரபதைஷ்சைவ ஹேதுமத்பிர்விநிஷ்சிதை:॥ 13.4 ॥

இந்த உண்மையை முனிவர்கள் பல வடிவ பாடல்களில் பல விதமாக பாடியுள்ளனர். காரண காரியங்களுடன் நிச்சயமான வகையில் அமைந்துள்ள பிரம்ம சூத்திரங்களிலும் இது ஆராயப்பட்டுள்ளது.

மஹாபூதாந்யஹம்காரோ புத்திரவ்யக்தமேவ ச।
இந்த்ரியாணி தஷைகம் ச பம்ச சேந்த்ரியகோசரா:॥ 13.5 ॥br>
இச்சா த்வேஷ: ஸுகம் து:கம் ஸம்காதஷ்சேதநா த்ருதி:।
ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதாஹ்ருதம்॥ 13.6 ॥

மகா பூதங்கள், அகங்காரம், புத்தி, அவ்வியக்தம், பத்து கருவிகள், மனம், கருவிகளின் பொருட்கள் ஐந்து, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம், உடம்பு, உணர்வு, மனஉறுதி ஆகிய மாறுபாடுகளுடன் கூடிய வீடுபற்றி இங்கே சுருக்கமாக சொல்லப்பட்டது.

அமாநித்வமதம்பித்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம்।
ஆசார்யோபாஸநம் ஷௌசம் ஸ்தைர்யமாத்மவிநிக்ரஹ:॥ 13.7 ॥

தற்பெருமையின்மை, செருக்கின்மை, கொல்லாமை, பொறுமை, நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி, சுயகட்டுப்பாடு.

இந்த்ரியார்தேஷு வைராக்யமநஹம்கார ஏவ ச।
ஜந்மம்ருத்யுஜராவ்யாதிது:கதோஷாநுதர்ஷநம்॥ 13.8 ॥

போக பொருட்களில் நாட்டமின்மை, ஆணவமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய், துயரம் ஆகியவற்றின் கேடுகளை சிந்தித்தல்.

அஸக்திரநபிஷ்வங்க: புத்ரதாரக்ருஹாதிஷு।
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு॥ 13.9 ॥

பற்றின்மை, மகன் மனைவி வீடு போன்றவற்றை தன்னுடையது என்று கருதாமல் இருப்பது, விரும்புவது விரும்பாதது எது நடந்தாலும் சமமாக ஏற்றுக்கொள்ளல்.

மயி சாநந்யயோகேந பக்திரவ்யபிசாரிணீ।
விவிக்ததேஷஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி॥ 13.10 ॥

வேறு எதையும் நாடாமல் என்னிடம் மாறாத பக்தி கொள்ளல், தனியிடத்தை நாடுதல், மக்கள் கூட்டத்தை விரும்பாதிருத்தல்.

அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்ததர்ஷநம்।
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யததோ அந்யதா॥ 13.11 ॥

ஆன்ம உணர்வில் நிலைபெற்றிருத்தல், லட்சிய நாட்டம் ஆகியவை ஞானம் என்று சொல்லபடுகிறது. இதற்கு வேறானது அஞ்ஞானம்.

ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா அம்ருதமஷ்நுதே।
அநாதிமத்பரம் ப்ரஹ்ம ந ஸத்தந்நாஸதுச்யதே॥ 13.12 ॥

எதை அறிய வேண்டுமோ, எதை அறிந்தால் மரணமில்லா பெருநிலையை அடையலாமோ அதை சொல்கிறேன். அது ஆரம்பம் இல்லாதது, மேலானது, பெரியது, இருப்பது என்றோ இல்லாதது என்றோ சொல்ல முடியாது.

ஸர்வத: பாணிபாதம் தத்ஸர்வதோ அக்ஷிஷிரோமுகம்।
ஸர்வத: ஷ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி॥ 13.13 ॥

அந்த பரம்பொருள் எங்கும் கைகள், கால்கள், கண்கள், தலைகள், வாய்கள், காதுகளை உடையவர். அவர் உலகில் எல்லாவற்றிலும் நிறைந்து நிற்கிறார்.

ஸர்வேந்த்ரியகுணாபாஸம் ஸர்வேந்த்ரியவிவர்ஜிதம்।
அஸக்தம் ஸர்வப்ருச்சைவ நிர்குணம் குணபோக்த்ரு ச॥ 13.14 ॥

அவர் எல்லா புலன்களையும் இயங்க செய்கிறார் ஆனால் அவர் எந்த புலன்களும் இல்லாதவர், பற்றற்றவர், ஆனால் அனைத்தையும் தாங்குகிறார். குணமே இல்லாதவர் ஆனால் எல்லா குணங்களையும் அனுபவிக்கிறார்.

பஹிரந்தஷ்ச பூதாநாமசரம் சரமேவ ச।
ஸூக்ஷ்மத்வாத்ததவிஜ்ஞேயம் தூரஸ்தம் சாந்திகே ச தத்॥ 13.15 ॥

அவர் பொருட்களுக்கு வெளியிலும் உள்ளேயும் இருக்கிறார். அசையாததும் அசைவதுமாகிய பொருட்கள் எல்லாம் அவரே, நுண்மையாக இருப்பதால் அவர் அறியபட முடியாதவர். அவர் தூரத்தில் இருக்கிறார். அருகிலும் இருக்கிறார்.

அவிபக்தம் ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம்।
பூதபர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்ரஸிஷ்ணு ப்ரபவிஷ்ணு ச॥ 13.16 ॥

அறியப்பட வேண்டிய அந்த பரம்பொருள் பிரிவுபடாதவர். பொருட்களில் பிரிவுபட்டது போல் தோன்றுகிறார். பொருட்களை தோற்றுவிப்பதும், தாங்குவதும், தன்னுள்கொள்வதும் அவரே.

ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே।
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநகம்யம் ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்॥ 13.17 ॥

அந்த இறைவன் ஒளிகளுக்கெல்லாம் ஒளியாக இருக்கிறார். அவர் இருளுக்கு அப்பாற்பட்டவர், அவரே ஞானம், அறியபடவேண்டியவர், எல்லோருடைய இதயத்திலும் நிலைத்திருப்பவர்.

இதி க்ஷேத்ரம் ததா ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸநாஸத:।
மத்பக்த ஏதத்விஜ்ஞாய மத்பாவாயோபபத்யதே॥ 13.18 ॥

இவ்வாறு வீடும், ஞானமும், அறியபடவேண்டிய பொருளும் பற்றி சுருக்கமாக கூறப்பட்டது. என் பக்தன் இதை அறிந்து, என் நிலைக்கு தகுதி ஆகிறான்.

ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்யநாதி உபாவபி।
விகாராம்ஷ்ச குணாம்ஷ்சைவ வித்தி ப்ரக்ருதிஸம்பவாந்॥ 13.19 ॥

இயற்கை, இறைவன் இரண்டிற்கும் ஆரம்பம் கிடையாது. மாற்றங்களும் குணங்களும் இயற்கையிலிருந்து பிறந்தவை என்பதை அறிந்து கொள்.

கார்யகாரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே।
புருஷ: ஸுகது:காநாம் போக்த்ருத்வே ஹேதுருச்யதே॥ 13.20 ॥

உடம்பையும் புலன்களையும் உண்டாக்குவதில் இயற்கை காரணம் என்று சொல்லபடுகிறது. சுக துக்கங்களை அனுபவிப்பதில் ஜீவன் காரணம் என்று சொல்லபடுகிறது.

புருஷ: ப்ரக்ருதிஸ்தோ ஹி புங்க்தே ப்ரக்ருதிஜாந்குணாந்।
காரணம் குணஸங்கோ அஸ்ய ஸதஸத்யோநிஜந்மஸு॥ 13.21 ॥

இயற்கையை சேர்ந்தவனான ஜீவன், இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களை அனுபவிக்கிறான். குணங்களின் மீதுள்ள பற்றுதலே அவனது நல்ல தீய பிறவிகளுக்கு காரணமாகிறது.

உபத்ரஷ்டாநுமந்தா ச பர்தா போக்தா மஹேஷ்வர:।
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே அஸ்மிந்புருஷ: பர:॥ 13.22 ॥

இந்த உடம்பில் உள்ள ஆன்மா சாட்சி, அனுமதிப்பவர், தாங்குபவர், அனுபவிப்பவர், மேலான தலைவர், பரம்பொருள், கடவுள் என்றெல்லாம் சொல்லபடுகிறது.

ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச குணை: ஸஹ।
ஸர்வதா வர்தமாநோ அபி ந ஸ பூயோ அபிஜாயதே॥ 13.23 ॥

ஆன்மாவையும், குணங்களுடன் கூடிய இயற்கையையும் யார் இவ்வாறு அறிகிறானோ, அவன் எவ்வாறு வாழ்பவனாக இருந்தாலும் மீண்டும் பிறப்பதில்லை.

த்யாநேநாத்மநி பஷ்யந்தி கேசிதாத்மாநமாத்மநா।
அந்யே ஸாங்க்யேந யோகேந கர்மயோகேந சாபரே॥ 13.24 ॥

சிலர் தியானத்தின் மூலம் தெளிந்த புத்தியால் ஆன்மாவை உள்ளத்தில் காண்கிறார்கள். சிலர் ஞான யோகத்தினாலும் சிலர் கர்ம யோகத்தினாலும் காண்கிறார்கள்.

அந்யே த்வேவமஜாநந்த: ஷ்ருத்வாந்யேப்ய உபாஸதே।
தே அபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஷ்ருதிபராயணா:॥ 13.25 ॥

இன்னும் சிலரோ இவ்வாறு அறியாதவர்கள், ஆனால் பிறரிடமிருந்து கேட்டு வழிபடுகின்றனர். கேட்டதில் முழு மனத்துடன் சாதனைகளில் ஈடுபடுகின்ற அவர்களும் மரணத்தை நிச்சயமாக கடக்கின்றனர்.

யாவத்ஸம்ஜாயதே கிம்சித்ஸத்த்வம் ஸ்தாவரஜங்கமம்।
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகாத்தத்வித்தி பரதர்ஷப॥ 13.26 ॥

பரத குலத்தில் சிறந்தவனே ! அசையாததும் அசைவதுமாகிய எந்த பொருள் தோன்றியிருந்தாலும், அது வீடு மற்றும் குடியிருப்பவன் இரண்டின் சேர்க்கையாலேயே தோன்றியுள்ளது என்று அறிந்து கொள்.

ஸமம் ஸர்வேஷு பூதேஷு திஷ்டந்தம் பரமேஷ்வரம்।
விநஷ்யத்ஸ்வவிநஷ்யந்தம் ய: பஷ்யதி ஸ பஷ்யதி॥ 13.27 ॥

எல்லா உயிரினங்களிலும் சமமாக உறைபவரும், அழிகின்ற பொருட்களுக்குள் அழியாமல் இருப்பவரும் ஆகிய மேலான இறைவனை யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.

ஸமம் பஷ்யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்திதமீஷ்வரம்।
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் கதிம்॥ 13.28 ॥

எங்கும் சமமாக நிறைந்து இருக்கின்ற இறைவனை காண்பவன் தன்னால் தன்னை அழித்துகொல்வதில்லை. அதனால் மேலான கதியை அடைகிறான்.

ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஷ:।
ய: பஷ்யதி ததாத்மாநமகர்தாரம் ஸ பஷ்யதி॥ 13.29 ॥

எல்லா செயல்களும் இயற்கையினாலேயே செய்யபடுகின்றன என்றும் இறைவன் தன்முனைப்பற்றவர் என்றும் யார் காண்கிறானோ அவனே காண்கிறான்.

யதா பூதப்ருதக்பாவமேகஸ்தமநுபஷ்யதி।
தத ஏவ ச விஸ்தாரம் ப்ரஹ்ம ஸம்பத்யதே ததா॥ 13.30 ॥

பல்வேறு உயிரினங்கள் ஒன்றில் இருப்பதையும் அந்த ஒன்றில் இருந்தே அவை அனைத்தும் விரிந்து வெளிபடுவதையும் எப்போது ஒருவன் காண்கிறானோ அப்போது அவன் இறைநிலையை அடைகிறான்.

அநாதித்வாந்நிர்குணத்வாத்பரமாத்மாயமவ்யய:।
ஷரீரஸ்தோ அபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே॥ 13.31 ॥

குந்தியின் மகனே ! ஆதி இல்லாததாலும் குணங்கள் இல்லாததாலும் அழிவற்ற இறைவன் இந்த உடம்பில் இருந்தாலும் செயல் புரிவதில்லை. பற்று கொல்வதும் இல்லை.

யதா ஸர்வகதம் ஸௌக்ஷ்ம்யாதாகாஷம் நோபலிப்யதே।
ஸர்வத்ராவஸ்திதோ தேஹே ததாத்மா நோபலிப்யதே॥ 13.32 ॥

எங்கும் பரந்துள்ள ஆகாசம் நுண்மை காரணமாக எப்படி எதனாலும் பாதிக்கபடுவதில்லையோ அப்படியே உடம்பு முழுவதும் நிறைந்துள்ள ஆன்மாவும் பாதிக்கபடுவதில்லை.

யதா ப்ரகாஷயத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி:।
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா க்ருத்ஸ்நம் ப்ரகாஷயதி பாரத॥ 13.33 ॥

அர்ஜுனா ! ஒரே சூரியன் இந்த உலகம் முழுவதையும் எப்படி ஒளிர செய்கிறானோ, அப்படியே குடியிருப்பவனாகிய இறைவன் உடம்பு, உயிர், மனம் அனைத்தையும் இயங்க செய்கிறான்

க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா।
பூதப்ரக்ருதிமோக்ஷம் ச யே விதுர்யாந்தி தே பரம்॥ 13.34 ॥

இவ்வாறு, வீடு மற்றும் குடியிருப்பவனுக்கு இடையிலுள்ள வேறுபாட்டையும் மக்கள் இயற்கையின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதையும் ஆன்மீக அனுபூதியின் வாயிலாக யார் உணர்கிறார்களோ, அவர்கள் மேலான நிலையை அடைகிறார்கள்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாகயோகோ நாம த்ரயோதஷோ அத்யாய:॥ 13 ॥

ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதின்மூன்றாவது அத்தியாயம் நிறைவுற்றது.

தொடரும்...

 

மேலும் மரண அறிவித்தல்களுக்கு