இலங்கையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரும் சிக்கல்

Prasu
2 years ago
இலங்கையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பெரும் சிக்கல்

தற்போது செயல்படும் அமைச்சரவை இல்லாத அரச துறை ஊழியர்களுக்கு இம்மாதத்திற்கான சம்பளம் வழங்குவது தொடர்பில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது.

இன்னும் சில தினங்களில் அமைச்சரவை கூட்டத்தை கூட்ட முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற முடியாதுள்ளது.

அமைச்சரவையின் முடிவு நாணயச் சபைக்கு அனுப்பப்பட்ட பின்னர் பணத்தை அச்சிடுவதற்கான சட்டப்பூர்வ இடம் வழங்கப்படுகிறது. 

அரச துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு சராசரியாக மாதமொன்றுக்கு 29 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எவ்வாறாயினும், பதில் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பணத்தை அச்சிடுவதற்கான அனுமதியை பெற்றுக்கொள்வதற்காக அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியும்.

அமைச்சரவையின் அனுமதியின்றி எரிபொருள் ஏற்றுமதிக்கான கொடுப்பனவுகளை செலுத்த முடியாது என்பதால் இந்த நிலைமை எரிபொருள் இறக்குமதியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.