இலங்கை மக்களின் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Prabha Praneetha
2 years ago
இலங்கை மக்களின் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் சராசரியாக ஒன்பது இலட்சம் குடும்பங்கள் தங்களது அன்றாட உணவைப் பெற்றுக்கொள்ளக் கூட வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் உள்ள 17 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் 9 இலட்சம் குடும்பங்கள் ஒரு வேளை உணவு அல்லது இரண்டு வேளை உணவு உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள இதனை  தெரிவித்துள்ளார்.