அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து இலங்கைக்கு பெருமளவு மருந்துகள் நன்கொடை

Prabha Praneetha
2 years ago
அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து இலங்கைக்கு பெருமளவு மருந்துகள் நன்கொடை

அமெரிக்க நிறுவனம் ஒன்றிடமிருந்து இலங்கைக்கு பெருமளவு மருந்துகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 

32 கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய மருந்துகள் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளளன. 

குறித்த மருத்துவ உதவிகளில் முதல் பகுதியை இலங்கை பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்கவின் தலையீட்டின் மூலம் ‘ஹார்ட் டு ஹார்ட்’ என்ற சர்வதேச அமைப்புடன் இணைந்து இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.