எரிபொருள் வரிசையில் வைத்தியர் மீது தாக்குதல்

Prabha Praneetha
2 years ago
எரிபொருள் வரிசையில் வைத்தியர் மீது தாக்குதல்

எரிபொருள் வரிசையில் வைத்தியர் ஒருவர் மீதும் மற்றும் சுகாதார ஊழியர் ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தெஹியத்தகண்டிய நவமெதகம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருள் விநியோகிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த குழுவினர் இந்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமக்கு தேவையான எரிபொருள் கிடைக்கவில்லை என குற்றம் சுமத்தி அரச வைத்தியசாலைகள் சிலவற்றின் ஊழியர்கள் இன்று சேவையில் இருந்து விலகியிருந்தனர்.