லிட்ரோ உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

Kanimoli
1 year ago
 லிட்ரோ உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

 லிட்ரோ உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை மீண்டும் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விடயத்தை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை சூத்திரத்தின்படி, உலக சந்தையில் எரிவாயு விலை மற்றும் இதர செலவுகளுக்கு ஏற்ப இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (5) நள்ளிரவு முதல் 200 முதல் 300 ரூபா வரை விலை குறையலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, ஏனைய எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.