யாழில் புகையிரதத்திற்கு பலியிடப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...

Prathees
1 year ago
யாழில் புகையிரதத்திற்கு பலியிடப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு...

கடந்த 3 மாதங்களில் யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் மட்டும் புகையிரதத்தில் மோதுண்டு 37 மாடுகள் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மிருசுவில் பகுதிக்கு மேலதிகமாக கடந்த 3 மாதங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத பாதையில் ஏறக்குறைய 100 மாடுகள் உயிரிழந்துள்ளதாகவும் அதே எண்ணிக்கையில் காயமடைந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கால்நடை உரிமையாளர்கள் கால்நடைகளை உரிய முறையில் கட்டுப்படுத்தாததே ரயில்களில் மோதுவதற்கு முக்கிய காரணம் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கால்நடைகளை பிடிக்கும் பகுதிகளுக்கு மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு பொறுப்பானவர்கள் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தால் கால்நடைகள் தேவையின்றி இறக்காது என யாழ்ப்பாண மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.