மனித உரிமைகள் ஆணைக்குழு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம்!

Mayoorikka
1 year ago
மனித உரிமைகள் ஆணைக்குழு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம்!

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைகள் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை நடைமுறைப்படுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்துமாயின் அவை அனுமதிக்கப்படாது என இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பொது மக்கள்  பாதுகாப்பு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.