பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கவனம்!

Mayoorikka
3 years ago
பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கவனம்!

கொவிட் தொற்று பரவிய காலப்பகுதியில் அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

​கொவிட் தொற்றுநோய்களின் போது, ​​இருக்கை அளவிற்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்வது உள்ளிட்ட நிபந்தனைகளால் பேருந்து கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது, பின்னர் அது 10 சதவீதம் குறைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போது லங்கம மற்றும் தனியார் பஸ்கள் நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்வதால், எஞ்சிய 10 சதவீதத்தை பஸ் கட்டணத்தில் கழிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

அதற்காக, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட கொவிட் தொடர்பான சுற்றறிக்கை நீக்கப்பட வேண்டும் என்ற போதும் அது இதுவரை செய்யப்படவில்லை.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் “அத தெரண” வினவியபோது, ​​இது தொடர்பில் உரிய தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கொவிட் காலத்தில் உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் உரிய அதிகாரிகளுடன் நடத்தப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4