ரஷ்யாவின் யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளன.

Kanimoli
1 year ago
ரஷ்யாவின் யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளன.

ரஷ்யாவின் யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளன.

பசிபிக் கடற்படையின் ஒரு பிரிவின் தலைமையில் இந்தக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

ரஷ்யாவின் வார்யாக் சீருந்து ஏவுகணை கப்பல் மற்றும் அட்மிரல் த்றிபூட்டஸ் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் ஆகியன இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளன.

பசிபிக் கடற்படையின் தெற்கே உள்ள இலங்கையின் பொறுப்பு வலயத்திற்குள் இந்தக் கப்பல்கள் நுழைந்துள்ளன.

விலடிவஸ்தோக் நகரிலுள்ள தளத்தில் இருந்து வெளியேறி வெளிநாட்டு கடற்பரப்பு வலையத்தில் செயற்பட்ட பின்னர் மீண்டும் மத்திய தரைக் கடலில் நிலைநிறுத்தப்படவுள்ளது.

இந்தக் கப்பல்கள் தற்போது இந்தியப் பெருங்கடலைக் கடந்து கிழக்கு ரஷ்யாவை நோக்கி பயணிக்கின்றன.

இந்தக் கப்பல்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தளத்தில் இருந்து புறப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.