தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய, எல்லை நிர்ணய குழுவின் தலைவராக நியமனம்

Kanimoli
1 year ago
தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய, எல்லை நிர்ணய குழுவின் தலைவராக நியமனம்

தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய, எல்லை நிர்ணய குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் தினேஸ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்றை பிரதமர் நிறுவியுள்ளார்.

ஐந்து பேர் அடங்கிய இந்தக் குழுவிற்கு மகிந்த தேசப்பிரிய தலைமை தாங்குகின்றார்.

இந்த குழுவில் ஜயலத் திஸாநாயக்க, எம்.ஆர்.அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் கீழ் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.