பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார் ரணில்
Prabha Praneetha
1 year ago
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடுகள் எதிர்நோக்கியுள்ள தற்போதய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமாக சூழலையும் ஸ்திரத்தன்மையையும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மிக முக்கியவம் வாய்ந்ததாக அமையும் என ஐ நா பொதுச்செயலாளர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள விசேட வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார் .
எகிப்து நோக்கி பயணமான ஜனாதிபதி எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான COP 27 உலக மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளமை குறிப்பிடதக்கது.