தேசியப்பட்டியலில் பிரதிநிதித்துவம் கோரும் ஆதிவாசிகளின் தலைவர்

Prathees
3 years ago
தேசியப்பட்டியலில் பிரதிநிதித்துவம் கோரும் ஆதிவாசிகளின் தலைவர்

தேசிய பட்டியலிலிருந்து ஆதிவாசி ஒருவரை பாராளுமன்றத்திற்கு நியமிக்க வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலத்தோ தெரிவித்துள்ளார்.

தம்பானையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பதுளை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 500,000 இற்கும் அதிகமான பழங்குடியினர் வாழ்கின்றனர்.

அவுஸ்திரேலியாவின் பாராளுமன்றத்தில் பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் இருப்பதாகவும், நேபாளத்தில் பழங்குடியின பாரம்பரிய மக்கள் உயர் பதவிகளை வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“எங்கள் நாட்டில் முதன்முறையாக ஒரு ஆதிவாசி பெண் உள்ளுராட்சி மன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.ஹென்னனிகலவில் வசிக்கும் எனது மருமகள்.ஆனால் இந்நாட்டின் முதல் உரிமையாளர் என்ற பெருமையை பெற்ற எமது மக்கள் மற்றும் பழமையான மக்களுக்கு இன்னும் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லை.

பல்வேறு இனங்களைப் பற்றி பேசுவதற்கு பாராளுமன்றத்தில் யாராவது ஒருவர் இருக்கிறார். சில மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் உண்டு. ஆனால் இந்நாட்டின் மூலச் சொந்தக்காரர்களான எம்மைப் போன்றவர்கள் தமது பிரச்சினைகளைப் பற்றிப் பேச ஆளில்லை.

தற்போது, ​​ஆதிவாசிகள் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்படுகிறார்கள். கலாசார அமைச்சு என்பது பழங்குடியின மக்களை மட்டும் தேட வேண்டிய அமைச்சு அல்ல. எமது தலைமுறையைச் சேர்ந்த ஒருவருக்கு தேசியப்பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் உரிமை உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4