ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதிகளை நடத்தி வந்த 8 பெண்கள் கைது

Kanimoli
1 year ago
ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதிகளை நடத்தி வந்த 8 பெண்கள் கைது

நீர்கொழும்பில் ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதிகளை நடத்தி வந்த 8 பெண்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுர்வேத ஸ்பா என்ற போர்வையில் இயங்கி வந்த மூன்று விபச்சார விடுதிகளை நீர்கொழும்பு பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் சுற்றிவளைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 21 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் மாவவில, பாணந்துறை, பிடிகல, ஜாஎல, வெல்லவன, பெல்தொட்ட மற்றும் மஹாபொத்தனேவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!