பிறர் துயர் காண பிதற்றும் என் மனது? சுட்டெரிக்கும் அந்த உச்சி வெயில். சூடு தாங்காத குருத்து வாடிக் கிடக்கும். - நதுநசி. இன்றைய கவிதை 03-04-2023.

#கவிதை #மனம் #இன்று #தகவல் #லங்கா4 #Health #Mind #today #information
பிறர் துயர் காண பிதற்றும் என் மனது? சுட்டெரிக்கும் அந்த உச்சி வெயில். சூடு தாங்காத குருத்து வாடிக் கிடக்கும். - நதுநசி. இன்றைய கவிதை 03-04-2023.

பிறர் துயர் காண
பிதற்றும் என் மனது?
***********************************

சுட்டெரிக்கும் அந்த
உச்சி வெயில்.
சூடு தாங்காத குருத்து
வாடிக் கிடக்கும்.

ஏழை குடிலில்
பிறந்த குழந்தையும்
சூடு தாங்காத
குருத்தைப் போலன்றோ?

எண்ணி நடக்கையில்
ஏனோ ஒரு ஏக்கம்.
என்னுள் வந்து தந்தது
மனதில் தாக்கம்.

வசதி இல்லாத
வீட்டுப் பிள்ளை அது.
வசதி இருந்தும்
இல்லாத பிள்ளை நான்.

சூழல் தந்த சூடு
சுட்டெரிக்கும் என்னை.
சூழ்ந்த என் வாழ்வில்
எனை எண்ணி பார்த்தால்.

பிறர் துயர் கண்டு
பிதற்றும் என் மனது.
பிஞ்சில் நான் பட்டது
சுட்டதால் என்னவோ?

வலி உணர்ந்து வாழும்
வாழ்வால் வளமாகும்.
வாழ்க்கை ஒன்றை
வாழும் படி அது ஆக்கும்.

சூரியன் போல இங்கே
சூழலில் இல்லை.
நல்ல மனிதர் என்று
சொல்லும் வண்ணம்.

ஏற்றம் தந்த போதும்
மாற்றம் தந்து போகும்.
சூரிய கதிர்ப்பில் தான்
எத்தனை தோற்றம்.

ஏழை குழந்தை அது
சிரித்து மகிழ வாய்ப்பு
ஏக்கம் போக்கும் வகையில்
மாற்றம் வேண்டும் முயல்.

                                                                                              ......... அன்புடன் நதுநசி