இலங்கைக்கு உதவுவுமாறு ரஜினிகாந்திடம் கோரிக்கை விடுத்த உயர்ஸ்தானிகர்!

#India #SriLanka
Mayoorikka
10 months ago
இலங்கைக்கு உதவுவுமாறு ரஜினிகாந்திடம் கோரிக்கை விடுத்த உயர்ஸ்தானிகர்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

 நடிகர் ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் நேற்று முன்தினம் (29) அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

 அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார்.